Thursday, August 07, 2014

சிவபுராணத்தின் படி ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை எவ்வாறு அறியலாம்




இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது.

இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது. இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும்.

மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிவபுராணத்தின் படி, பார்வதி தேவி சிவனிடம் ஒருவன் இறக்க போகிறான் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்டுள்ளார்.

அப்போது சிவன் ஒருசிலவற்றை கூறி, அத்தகைய அறிகுறிகள் இருந்தால், அவன் சீக்கிரம் இறக்க போகிறான் என்று சொன்னார். இங்கு சிவபெருமான் கூறிய அந்த அறிகுறிகள் தான் கொடுக்கப்பட்டுள்ளன. அதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், தொடர்ந்து படித்து பாருங்கள்.

அறிகுறி 1

எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 2

எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.

அறிகுறி 3

எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 4

ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.

அறிகுறி 5

ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 6

நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 7

எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.

அறிகுறி 8

ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.

அறிகுறி 9

சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.

அறிகுறி 10

ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்

Saturday, August 02, 2014

இரு தேசம் ஒரு நாடு | Two Nations One Country

புவியியல், பொருளாதாரம், மக்கள் அனைத்தும் வேறு வேறு பிறகு ஏன் ஒரு நாடு !!!

புவியியல் 
அங்க மழை சோ எனப் பெய்யுது, இங்க எல்லாம் காய்ஞ்சு கருகுது.
இங்க இல உதிர்கைல அங்க இல துளிர் காலம்



பொருளாதாரம்
அங்க திறந்த பொருளாதாரம் இங்க மூடிய பொருளாதாரம்



மக்கள் 
இங்க திராவிடன் அங்க ஆரியன்


Friday, August 01, 2014

ஆபீஸில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி ? How to Score more in Appraisal at Office?

ஒரு பாம்பு ஒபிசுக்குள்ள வந்திட்டு அத இரண்டு பேர் எப்பிடி மேலிடத்துக்கு ஒப்பிக்கிறாங்க எண்டுறத  பாருங்க















Worker - 01
சேர் ! பாம்பு ஒண்டு வந்திச்சு அத அடிச்சு குப்பைல போட்டுட்டன்

Worker - 02
சேர் ! ஒரு பெரிய பாம்பு சேர் விடிய நான் ஒபிசுக்கு வரேக்க இருந்துச்சு, நல்ல கருப்பு சேர், நீட்டு, நான் சரியாப் பயந்து போட்டன், ஒபிசுக்கு உள்ளுக்குள்ள போகவே இல்ல, அது சேர் என்னைப் பாத்து சீறிச்சு சேர், நான் சத்தம் இல்லாம வெளியால வந்து கதவ சாத்திப் போட்டு வெளியால நின்னு தான் பாத்தன்.

அது அப்பிடியே என்னைப் பாத்தபடி வந்து மேசைக்கு மேல ஏறி பூச்சாடிய உருட்டிப் போட்டுது, பேந்து அப்பிடியே வந்து குப்பைக் கூடைக்குள்ள போச்சு சேர். சடும் எண்டு வெளில வந்து யன்னல் பக்கமா வந்து என்னையே பாத்தபடி யன்னலால வெளியால போட்டு சேர். எனக்கு சரியா பயமா இருக்கு சேர். நான் பயந்து பயந்து தான் உள்ளுக்கு இருந்து வேலை செய்யுறன் சேர்.  பாம்பு எப்ப திரும்ப வருமோ தெரியா சேர். பாம்பு வந்தா நான் உங்களுக்கு சொல்லுறன் சேர்.

இப்பத்தே காலத்தில இரண்டாவது ஆளுக்குத் தான் காலம். முதலாவது ஆள் வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு இருப்பான். ஆனா தான் கஷ்டப்பட்டத வெளியால சொல்ல மாட்டான். அவனுக்கு எந்த மதிப்பும் இல்ல,

ஆனா இரண்டாவது ஆள் ஒண்ணுமே இல்லை. ஆனா அவனுக்குத்தான் இந்த காலம் மதிப்புக் குடுக்குது. புள்ளியும் கூட கிடைக்கும். திறமைக்கு மதிப்பு இல்ல, வாய் பேச்சுக்கு மட்டும் தான் எல்லாம் !




-------------------------------------------------------------------------------------
இது நான் கன நாளா எழுத ஜோசிச்ச விஷயம் இத நான் எழுதுறதால எனக்கு எதிர்ப்புகள் வரவும் நிறைய சான்ஸ் இருக்கு (அவ்வ்)

குற்றமுள்ள ஆக்கள் பிலீஸ் அமைதி காக்கவும்

--------------------------------------------------------------------------------------