Sunday, December 19, 2021

சாமி காவுதலில் வாகனப் பயன்பாடு

 நாங்கள் இன்றைய அவசர உலகில் ஆன்மிக நாட்டம் குன்றி சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றோம்.

இன்று பலர் இக்கருத்தைச் சொல்லி நாம் பிழைத்துக் கொள்கின்றோம். நான் உட்பட...

ஆனால் இது ஒரு மிகத்தவறான கருத்தாகும். உண்மையில் களவுக்குப் போகின்றவனும் கள்ளக் கடத்தலில் ஈடுபடுபவனும் தான் மிகக் கடவுள் பக்தி கொண்டவனாய் இருக்கின்றான்.

எங்கு எங்கு பிரச்சனைகள் இருக்கின்றதோ அங்கு எல்லாம் கடவுள் பக்தி அதிகமாய் இருக்கின்றது. அதிலும் சைவக் கடவுள் பக்தி அதிகரிக்கின்றது. பிரச்சனை குறைந்த இடத்தில் கடவுள் பக்தி குறைவாகின்றது. 

ஒரு உதாரணத்திற்கு யுத்த காலத்தில சாமி காவுறத்துக்கெல்லாம் ஆக்கள் தானாக வருவார்கள். ஆனால் இன்று ஆக்களுக்கு சொல்லி அனுப்ப வேண்டி உள்ளது. 

நாம் எங்கு இருக்கின்றோம் ........

சிறு தெய்வ வழிபாடு உள்ள இடங்களில் இவ்வாறு இல்லை. அதற்கான காரணங்கள் என்ன என்பது ஆராயப்பட வேண்டும்.

No comments: